பொது மக்கள் எதிர்ப்பார்த்தைப் போலவே, 2026 ஆம் ஆண்டு முதல் பள்ளியின் புதிய தவணை ஜனவரி மாதத்தில் தொடங்கும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடெக் இன்று அறிவித்தார்.
2024 / 2025 ஆம் ஆண்டுக்கான பள்ளித் தவணை, 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குவதற்கு ஏதுவாக கல்வி அட்டவணையைத் தயாரிக்கும் நடவடிக்கையில் அமைச்சு ஈடுபட்டுள்ளதால், பள்ளித் தவணை ஜனவரி மாதம் தொடங்கப்பட வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையும், எதிர்பார்ப்பும், வரும் 2026 ஆம் ஆண்டில் பூர்த்தியாகும் என்று ஃபட்லீனா சீடெக் மக்களவையில் தெரிவித்தார்.