சுபாங் விமான நிலையம் என பலரால் அறியப்படும் சுல்தான் அப்துல் அஸீஸ் ஷா விமான நிலையத்தின் மேம்பாடு குறித்த முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்தார்.
57 வரலாறு கொண்ட அந்த விமான நிலைய அனைத்துலக விமான தரத்திற்கு உயர்த்துவதற்கான வேலை பாடுகளுக்கான திட்டங்கள் விவாதிக்கப்பட்டு வருவதால் அதன் முடிவுகள் குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் மக்களவையில் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் தொடுத்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.