சுங்கை ஊலார் தோட்ட ஆலயத்தின் தீமிதி திருவிழா குளறுப்படி

கூலிம் மாவட்டத்தில் அமைந்துள்ள சுங்கை ஊலார் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்திர ஆண்டு தீமிதி விழாவில் எழுந்துள்ள குளறுபடிக்களுக்கும் கூலிம் பண்டார் பாரு மக்கள் நீதி கட்சிக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்று கூலிம் பண்டார் பாரு மக்கள் நீதி கட்சியின் தலைவர் தே லியான் ஓங் தெளிவுப்படுத்தினார் .

வரும் ஜுன் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள சுங்கை ஊலார் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழாவிற்காக காவல்துறையின் அனுமதி கடிதத்தை பெறுவத்தற்கு இரண்டு குழுக்கள் காவல்துறையை நாடியுள்ளனர்.

அதன் அடிப்படையில் கடந்த ஜுன் முதல் தேதி அவ்விரு குழுவினருக்கும் காவல்துறையினர் அனுமதி வழங்கினர் . ஆனால் இந்த அனுமதி கடிதத்தினால் பல பிரச்னைகள் எழுந்துள்ள பட்சத்தில் கூலிம் மாவட்ட காவல்துறையினர் அந்த அனுமதி கடிதத்தை உடனடியாக ரத்துச் செய்து, கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது. .

தொடர்ந்து , ஆலயத்தின் தீமிதி திருவிழாவின் பிரச்சனைகள் கலந்துரையாடலில் இருக்கும் பட்சத்தில் வாட்சாப் மூலமாக கூலிம் பண்டார் பாரு மக்கள் நீதி கட்சியின் சில உறுப்பினர்களின் நடவடிக்கையினால் தாம் வருத்தம் அடைந்துள்ளதாக தே லியான் ஓங் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS