20 லட்சம் வாகனங்கள் பிளஸ் சாலையை பயன்படுத்தலாம்

வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு வடக்கு தெற்கு நெடுஞ்சாலையை அன்றைய தினம் சுமார் 20 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தங்களின் கிராமங்களுக்கு செல்கின்றர்கள் மற்றும் கிராமங்களிலிருந்து கிள்ளான் பள்ளாத்தாக்கிற்கு திரும்புகின்றவர்கள், வரும் ஜுலை 2 ஆம் தேதி வரை தங்களின் பயண அட்டவணையை எவ்வாறு அமைத்துக்கொள்ள முடியும் என்பது குறித்து ஓர் உத்தேச அட்டவணையை பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாகி முஹமட் யூசோப் அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS