கெடா மாநில சட்டமன்றம் இன்று அதிகாரப்பூர்வமாக கலைக்கப்படுகிறது

மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், கெடா மாநில சட்ட மன்றம் இன்று புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, விஸ்மா டாருல் அமான்னில் கெடா மாநில மந்திர் பெசார், மாநில சுல்தான் சுல்தான் சலேஹுடின் சுல்தான் பட்லிஷாவை சந்தித்து, அவரது ஒப்புதலுக்கு இணங்க 14 வது தவணைக்கான கெடா மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்பட்டது.

இவ்வாறு கலைக்கப்பட்டதன் மூலம் கடந்த 2020 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி அன்று பக்காத்தான் ஹராப்பானிடம் இருந்து மாநில அரசாங்கத்தைக் கைப்பற்றிய பெரிகாத்தான் நேஷனல் அரசாங்கத்தின் மூன்றாண்டு நிர்வாகம் முடிவுக்கு வந்தது.

WATCH OUR LATEST NEWS