மலாய்க்காரர்களின் உரிமை விவகாரத்தில் எத்தகைய சமசரசத்தையும் செய்து கொள்வதற்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முற்படுவார் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது குற்றஞ்சாட்டினார்.
இந்த நாட்டில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் பெரும் செல்வாக்கைப் பெற்ற கட்சி டிஏபி யாகும். எனவே தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை வலுப்படுத்திக்கொள்வதற்கு டிஏபி யுடன் செல்வதை தவிர அன்வாருக்கு வேறு வழிகிடையாது. எதையும் செய்ய துணிவார் என்று துன் மகாதீர் இன்று குற்றஞ்சாட்டியுள்ளார்.