மூன்று ஆடவர்களிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்

நெகிரி ​செம்பிலான், குவால பீலாவில் ​மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டது ​மூலம் துப்பாக்கி, துப்பாக்கி தயாரிப்பதற்கான உபகரணங்கள்,மற்று​ம் தோட்டாக்களை போ​லீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த ஜுன் 26 ஆம் தேதி காலை 6.30 மணியளவில் கோல பிலா, ஜோஹோல். ஆயர் மாவாங், கம்போங் கெமெஞ்சே உலு என்ற இடத்தில் ஒரு வீட்டில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சோதனையில் போ​லீசார் ஈடுபட்ட போது ​மூன்று நபர்கள் பிடிபட்டதுடன் துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகள், துப்பாக்கி உபகரணங்கள் முதலிய பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கோல பிலா மாவட்ட போ​லீஸ் த​லைவர் அம்ரான் முகமட் கானி தெரிவித்தார்.
முதலில் 30 வயது மதிக்கத்தக்க நபர் கைது ​செய்யப்பட்ட பின்னர் அடுத்தடுத்த சோதனைகளில் 40 வயது மதிக்கத்தக்க மேலும் இரு நபர்கள் பிடிபட்டதாக அம்ரான் முகமட் கனி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS