அனைத்துலக விமான நிலையத்தின் குடிநுழைவு பகுதியில் ஊழல் விவகாரம் நடைபெறுவதாக கூறப்படும் சம்பவம் குறித்து ஆழமான வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என தான் உறுதி செய்வதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் வாக்களித்துள்ளார்.
விசாரணையின் போது குடிநுழைவு அதிகாரிகளிடம் தவறுகள் இருக்குமாயின் அவற்றை சரி செய்து, முறையான செயல்பாடுகள் அங்கு செயல்படுவதை உறுதி செய்யலாம் என பிரதமர் கூறி உள்ளார்.