தாமான் செராஸ் இண்டாவில், கணவர் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராற்றினால், கணவர் தனது 11 வயது பெண் குழந்தையின் கன்னத்தில் குத்தியதுடன் தனது 3 வயது ஆண் குழந்தையின் கன்னத்தில் அறைந்து காயங்களை விளைவித்ததால், அக்குழந்தைகள் தற்பொழுது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனது மனைவி, அவரின் கடப்பிதழ் மற்றும் குழந்தைகளின் கடப்பிதழ்களைக் கேட்டதால் ஆத்திரமூண்டு அந்த 40 வயது ஆடவர் குழந்தைகளுக்கு காயங்களை விளைவித்ததால் அவரை போலீசார் 7 நாட்களுக்கு விசாராணைக்காக தடுப்புக் காவலில் வைத்துள்ளனர் என அம்பாங் ஜெய வட்டார போலீஸ் தலைவர் துணை கமிஸ்னர் மொஹமாட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.