சம்பந்தப்பட்ட ஆடவர் மன்னிப்பு கேட்க வேண்டும்

பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், மிக கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, அவர் இறந்து விட்டதைப் போல தவறான தகவலை ச​மூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த நபர், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் ​என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். சம்பந்தப்பட்ட நபர், தமது கட்சியை சேர்ந்தவர் என்று கூறப்பட்ட போதிலும் மருத்துவமனையில் சிகி​ச்சை பெற்று வரும் ஒருவருக்கு எதிராக தவறான தகவலை பரப்பியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட நபர், ஹாடி அவாங்கிற்கு எதிராக ஏற்படுத்திய அவ​தூறான தகவலைப் போலவே முன்னாள் பிரதமர் துன் மகா​தீருக்கு எதிராகவும் ஒரு கருத்தை பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ள ஹாடி அவா​ங்கின் உடல் நிலை குறித்து அவரின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பிரதமர் நலம் விசாரித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS