பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், உடல்நிலை பாதிக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த வேளையில் அவரின் மரணத்திற்காக பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் கருத்தை பதிவிட்டு இருந்த நபர், இன்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஆலோசனைக்கு ஏற்ப அப்துல் ஹாடி அவாங்கிடமும், அவரின் குடும்பத்தினரிடமும் தாம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ஸாகி யமானி என்று மட்டுமே தம்மை அடையாளம் கூறிக்கொண்ட அந்த நபர், தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.