பொது இடத்தில் கடந்த இரண்டு மூன்று தினங்களாக கைவிடப்பட்டு கிடந்த காரின் பூத்தில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது. ஷா ஆலாம், செக்ஷன் 30, தாமான் ஶ்ரீ ஓர்கிட்டில் கைவிடப்பட்ட ஹோட்டா சிட்டி காரிலிருந்து துர்நாற்றம் வீசியத்தை கண்ட அப்பகுதி மக்கள் நேற்று பிற்பகல் 3.25 மணியளவில் அந்த காரை திறந்து பார்த்த போது காரின் பூத்தில் ஆடவர் ஒருவரின் சடலம் கால்கைகள் கட்டப்பட்டு, பிளாஸ்டிக் பையில சுற்றுப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ரம்சே அனாக் எம்போல் தெரிவித்தார்.
இறந்து கிடந்த நபர் 47 வயது இந்தோனேசியப் பிரஜை என்றும் சவப்பரிசோதனைக்காக சடலம் ஷா ஆலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடைய இச்சம்பவத்தை கொலையென வகைப்படுத்திய ரம்சே குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் ஒரு பெண் மற்றும் மூவரை போலீசார் கைது செய்து இருப்பதாக குறிப்பிட்டார்.