ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலை வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஏககாலத்தில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முடிவெடுத்து இருப்பது பொருத்தமானதாகும் என்று கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் வர்ணித்துள்ளார்.
அதேவேளையில் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து தேர்தல் நடைபெறும் வரையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்திற்கு 15 நாட்கள் நிர்ணியக்கப்பட்டது போதுமானதாகும் என்ற சனூசி குறிப்பிட்டுள்ளார்.