6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் தினமான ஆகஸ்ட் 12 ஆம் தேதி பொது விடுமுறையும், இலவச டோல் கட்டணமும் அறிவிக்கப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆகஸ்ட் 12 ஆம் தேதி சனிக்கிழமை என்ற போதிலும் பொது விடுறை அறிவிக்கப்படுவது மூலம் தனியார் துறையை சேர்ந்தவர்கள் நிறைய பேர் தங்கள் கிராமங்களுக்கு சென்று வாக்களிக்க முடியும் என்று பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் ஆகியவற்றின் உறுப்பினர்கள் அறிவுறுத்துகின்றன.
அதேவேளையில் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு இலவச டோல் கட்டணம் அறிவிக்கப்படுவது மூலம் அதிகமான வாகனமோட்டிகள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதை பெரியளவில் ஊக்குவிக்க முடியும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.