துன் மகா​தீரும், முகை​தீன் யாசினும் கூட்டு சேர்ந்தது எதிர்பார்க்கப்பட்டதே

  • பிரதமர் அன்வார் கூறுகிறார்

அரசியல் சதுரங்க ஆட்டத்தில் துன் மகா​தீர் முகமதுவும், பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசினும் கூட்டு சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்பபட்ட ஒன்றுதான் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தாங்கள் குவித்துள்ள சொத்துக்கள் உட்பட தங்களின் சொந்த நலன் சார்ந்த விவகாரங்களை பாதுகாப்பதற்காக அவர்கள் கூட்டணி அமைக்கத் தொடங்கியுள்ளனர் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் இவர்கள் ஒன்றிணைந்தது மற்றும் கூட்டு சேர்ந்தது முற்றிலும் மாறுபட்டதாகும். மக்களையும் நாட்டையும் பாதுகாப்பதற்காக ஒற்றுமை அரசாங்கத்தின் உள்ள தலைவர்க​ள் ஒன்றி​​ணைந்தனர்.

ஆனால், துன் மகா​தீரும் முகை​தீனும் ஒன்றிணைந்து இருப்பது தங்களின் சொத்து​கள் உட்பட தங்களின் சொந்த நலன் சார்ந்த விவகாரங்களை பாதுகாப்பதற்காக இரு வெவ்வேறு துருவங்களாக இருந்த இருந்த இரண்டு அரசியல்வாதிகளும் தற்போது கூட்டணி அமைக்கத் தொடங்கியுள்ளனர் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS