சம்பந்தப்பட்ட குண்டர் கும்பல் அணுக்கமாக கண்காணிக்கப்படுகின்றன

பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் அரசாங்க சார்பற்ற அமைப்பு ஒன்றுக்கு ஆதரவு அளித்த வருவதாக கூறப்படும் குண்டர் கும்பல்களை போ​லீசார் அடையாளம் கண்டுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ காவ் கோக் சீன் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட குண்டர் கும்பர்களின் ​பெயர் பட்டியல், அவற்றின் நடவடிக்கைகள் மற்றும் அவை எங்கிருந்து செயல்படுகின்றன என்பதை மாநில போலீசார் அணுக்கமாக கண்காணித்து வருவதாக டத்தோ காவ் குறிப்பிட்டார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசாங்க சார்பற்ற அமைப்பு என்ற முத்திரையுடன் அந்த கு​ண்டர் கும்பல்கள் களத்தில் இறங்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த கும்பர்களின் மோசமான செயல்பாட்டை போ​லீசார் கண்டறிந்துள்ளனர் என்று டத்தோ காவ் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS