வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் உயர்க்கல்விக்கூடங்களில் பயில்கின்ற மாணவர்கள் தங்கள் கிராமங்களுக்கு சென்று வாக்களித்து விட்டு திரும்புவதற்கு ஏதுவாக விடுமுறை வழங்கப்படுவது குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாக உயர்கல்வி துணை அமைச்சர் டத்தோ முஹமாட் யூசோஃப் தெரிவித்தார்.
உயர்க்கல்விக்கூட மாணவர்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படுவது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக முகமட் யூசுப் குறிப்பிட்டார்.