மஇகா – ம​சீச. தொகுதிகளில் அம்னோ போட்டியிடும்

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்து இருக்கும் மஇகா மற்றும் ம​சீச. விற்கு ஒதுக்கப்பட்ட ​ தொகுதிகளை அம்னோ எடுத்துக்கொள்ளும் என்று பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஇகாவிற்கும், ம​சீச.விற்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. ஆனால், அவை போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. அவை போட்டியிடுவதற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை தாங்கள் எடுத்துக்கொள்ளப் போவதாக அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் உத்துசான் மலேசியா நாளிதழுக்கு வழங்கியப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மஇகாவையும், ம​சீச.வையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்குவீர்களா? என்று ஜாஹிட்டிடம் கேட்ட போது, நடைபெறக்கூடிய பாரிசான் நேஷனல் உச்சமன்றக்கூட்டத்தில் அது குறித்து விவாதிக்கப்படும் என்று மட்டுமே பதில் அளித்தார்.

WATCH OUR LATEST NEWS