பெரிக்காத்தான் நேஷனலில் இணைவதற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை மசீச. தலைவர் டத்தோ வீ கா சியோங் நிராயரித்துள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று மசீச எடுத்துள்ள முடிவைத் தொடர்ந்து பெரிக்காத்தான் நேஷனலில் இணைவதற்கு அதன் தேர்தல் இயக்குநர் முகமட் சனூசி முகமட் நூர் விடுத்துள்ள அழைப்பு தொடர்பில் “இல்லை” என்று வீ கா சியோங் பதில் அளித்துள்ளார்.
பாரிசான் நேஷனலில் உறுப்புக்கட்சிகளாக இருக்கின்ற மஇகாவும், மசீச.வும் அதிலிருந்து விலகி பெரிக்காத்தான் நேஷனலில் இணையுமானால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று முகமட் சனூசி, அந்த இரு கட்சிகளுக்கும் இன்று அழைப்பு விடுத்து இருந்தார்.