2022 ஆம் ஆண்டுக்கான எஸ்த்திபிஎம் தேர்வு முடிவுகள் இம்மாதம் 13 ஆம் தேதி வெளியிடப்படவிருக்கின்றன என்று மலேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் மாணவர்கள் காலை 11.30 மணி முதல்
தத்தம் பள்ளிகளில் தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம். அதேவேளையில் stpm.mpm.edu.my/stpmK என்ற அகப்பக்கத்தின் வாயிலாகவும் தங்கள் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கான எஸ்த்திபிஎம் தேர்வை நாடு தழுவிய நிலையில் 659 மையங்களின் வாயிலாக 41 ஆயிரத்து 701 மாணவர்கள் எழுதினர்.