கடநத் 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் எந்தெந்த தொகுதிகளில் பெர்சத்து கட்சிப் போட்டியிட்டதோ அந்த தொகுதிகள் அனைத்தும் அம்னோ போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் உறுப்புக்கட்சியாக பெர்சத்து விளங்கியதால் அந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கு அக்கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.
தவிர கடந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றிப்பெற்ற ஓரிரு தொகுதிகளையும் ஒற்றுமை உணர்வு அடிப்படையில் அம்னோவிற்கு விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அமிருடின் ஷாரி தெரிவித்தார்.