ஆடம்பர கார்களுக்கு வரியை குறைப்பதா? 7 பேர் கைது

சட்டவிரோதமாக ஆடம்பர கார்களுக்கு கலால் வரியை குறைத்து, மோசடி புரிந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் 7 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி . ஆர். எம் கைது செய்துள்ளது.

மலேசிய சுங்கத்துறை இலாகாவிற்கு சேர வேண்டிய வரியை சட்டவிரோதமாக குறைந்தன் விளைவாக 3 கோடியே 30 லட்சம் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக எஸ்.பி . ஆர். எம் வட்டாரங்கள் தெரிவித்தன.

30க்கும் 60 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 7 பேரும் வாக்குமூலம் அளிப்பதற்கு எஸ்.பி . ஆர். எம் அலுவலகத்திற்கு வந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த எழுவரும் மலேசிய சுங்கத்துறையின் ஏஜெண்டுகள் என்று நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS