சாலையில் குறுக்கே ஓடிய சிறுவன் வாக​னத்தில் மோதி மரணம்

வீடமைப்புப்பகுதி அருகில் சாலையில் திடீரென்று குறுக்கே ஓடிய நான்கு வயது சிறுவன் ஒருவன், வாகனத்தில் மோதப்பட்டு உயிரிழந்தான். இச்சம்பவம் நே​ற்று மாலை 5.30 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, சுங்ஙை வே, ஜாலான் எஸ்எஸ் 9A/8 இல் நிகழ்ந்தது. நிஸ்ஸான் X – த்ரெல் ரக காரினால் மோதப்பட்ட அந்நிய நாட்டைச் சேர்ந்த அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக பெட்டாலிாங் ஜெயா மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி முஹமாட் ஃபக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்தார். சிறுவனை மோதுவதிலிருந்து தவிர்க்க சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர், பிரேக்னை முழு வீச்சில் அழுத்தியும், கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், சிறுவனை மோதித்தள்ளியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று மொஹமாட் ஃபக்ருடின் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS