தேர்தல் பிரசாரத்தை ஒத்தி வைப்பீர்

சட்டமன்றத் தொகுதி தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் மத்தியில் கோவிட் 19 நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கபட்டால் தேர்தல் பிரசாரத்தை ஒத்தி வைக்கும்படி சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கும், தேர்தல் கேந்திரத்திற்கும் சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா அறிவுறுத்தியுள்ளார்.

கோவிட் 19 – க்கு வித்திடக்கூடிய நோய்த்தொற்று பரவலுக்கு வழிவிடாமல் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து, மாநில சட்டமன்றத் தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு வேட்பாளர்களும், தேர்தல் பணியாளர்களும் ஆதரவாளர்களும் நோய்த் தடுப்பிற்கான எஸ்.ஓ.பி நடைமுறையை பின்பற்றுமாறு அமைச்சர் டாக்டர் ஜாலிஹா ஆலோசனைக் கூறினார்.

WATCH OUR LATEST NEWS