90 விழுக்காடு வாக்குப்பதிவு

6 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு தழுவிய நிலையில் இன்று நடைபெற்ற முன்கூட்டியே வாக்களிப்பில் பிற்பகல் 3 மணி வரை 90 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் அறிவித்துள்ளது.

போலீஸ்காரர்கள், இராணுவ வீரர்கள், தேர்தல் பணியாளர்கள் ஆகியோர் முன்கூட்டியே வாக்களிப்பதற்கு ஏதுவாக இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்ட வாக்கு மையங்கள் மாலை 5 மணி வரை கட்ட கட்டமாக மூடப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த வாக்களிப்பில் நாடு முழுவதும் 98 ஆயிரத்து 785 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக எஸ்.பி.ஆர் அறிவித்தது.

WATCH OUR LATEST NEWS