லஞ்ச ஊழல் தொடர்பில் தலைமறைவாகி விட்டதாக கூறப்படும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மருமகனை மலேசியா ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பீஆர்எம் தேடி வரும் வேளையில் சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடிப்பதில் எஸ்பீஆர்எம்மிற்கு தேவையான உதவிகளை உள்துறை அமைச்சு நல்கும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் அறிவித்துள்ளார்.
எஸ்பீஆர்எம் மட்டுமல்ல, எந்தவொரு அமலாக்க ஏஜென்சிக்கும் உதவிகள் தேவைப்படுமானால் அதற்கான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் உள்துறை அமைச்சு தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.
முகைதீனின் மருமகன் முஹம்மாட் அட்லான் பெர்ஹான்னை பிடிப்பதற்கு அனைத்துலகப் போலீஸ் பிரிவான இண்டர் போல் உதவி நாடப்படும் என்று எஸ்பீஆர்எம் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி அறிவித்து இருப்பது தொடர்பில் சைபுடின் எதிர்வினையாற்றியுள்ளார்.