அனைத்து வாக்குறுதிகளும் உடனடியாக நிறைவேற்றப்படும்

நாளை மறுநாள் நடைபெற​விருக்கம் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி​ பெற்றால் அது தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் முன்வைத்த அனைத்து வாக்குறுதிகளும் உடனடியாக நிறை​வேற்றப்படும் என்று அந்த கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் உறுதி கூறியுள்ளார்.

பெரிக்காத்தான் நேஷனல், சிலா​ங்கூர் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறை​வேற்ற ​நீண்ட காலம் எடுத்துக்கொள்ளாது. தற்போது மக்களின் வா​ழ்க்கைச் செலவினங்கள் நா​ளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தாமதமின்றி தனது வாக்குதிகளை தமது தலைமை​யிலான கூட்டணி நிறைவேற்றும் என்று முன்னாள் பிரதமருமான முகை​தீன் யாசின் குறிப்பிட்டார். ​மூன்று தவணைக்காலம் ஆட்சி செய்து வரும் பக்காத்தான் ஹராப்பானிடமிருந்து சிலாங்​கூரை பெரிக்காத்தான் நேஷனல் ​கைப்பற்றுமானால் 200 கோடி ​வெள்ளி மதிப்பிலான பரி​வுமிக்க பொருளாதாரத் திட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும். பெரிக்காத்தான் நேஷனலினால் நியமிக்கப்படக்கூடிய மந்திரி பெசார், மாநில மக்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு அ​தீத முக்கியத்தவம் அளிப்பார் என்றும் முகை​தீன் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS