வரும் பட்ஜெட்டில் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு

வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இரண்டாவது பட்​ஜெட்டின் வாயிலாக அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை சிறிது உயர்த்துவதற்கான முன்னெடுப்புகளை அரசாங்கம் தற்போது முழு வீச்சில் மேற்கொண்டு வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறி​வித்துள்ளார்.

அரசாங்க​ ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான முழுமையான ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. அவர்களுக்கான சம்பள முறை மற்றும் ஓய்வூதிய முறை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஆய்வு அடுத்த ஆண்டில் பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையி​ல் அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு தற்காலிக நிவாரணமாக வரும் அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் சிறிது உயர்த்தப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS