400 கிலோவிற்கும் அதிகமான போதைபொருளை கடத்தியதாக தூக்குத் தண்டனை விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இரு இளைஞர்கள் ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டபட்டனர்.
44 வயது மதிக்கதக்க அவ்விரு ஆடவர்களும் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 9:15 மணியளவில் ஈப்போ அருகில் செம்மோர், பண்டார் பாரு, ஶ்ரீ கிளேபாங் என்ற இடத்தில் ஒரு வீட்டில் 413.826 கிலோ எடைக்கொண்ட எரிமின் 5 வகையை சேர்ந்த போதைபொருளை கடத்தியதாக குற்றஞ்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இவ்விருவரும் தூக்குத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க வகைச் செய்யும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டபட்டுள்ளனர்.