காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு சிறார் காப்பாற்றப்பட்டார்

கதவுகள் பூட்டப்பட்ட காருக்கும் சுயநினைவின்றி கிடந்த சிறார் ஒருவரை வழிப்போக்கர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். இச்சம்பவம் நேற்று ஷா ஆலாமில் நிகழ்ந்தது. அந்த சிறாரின் காப்பாளரால் காருக்குள் விடப்பட்டு இருக்கலாம் என்று நம்ப்படும் அந்த சிறார், காரின் கண்ணாடி ஒன்று சிறிது இறக்கப்பட்ட நிலையில் காருக்கும் சுமார் 40 நிமிடமாக மூச்சுத்திணறலுக்கு ஆளாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்த சம்பவத்தை தமது கைப்பேசியில் பதிவு செய்த வழிப்போக்கர் ஒருவர், பின்னர் பொது மக்களின் உதவியுடன் காரின் காண்ணாடியை உடைத்து அந்த சிறாரை காப்பாற்றியுள்ளார். தன்னை அரிஃப்ஜாத் என்று மட்டுமே அடையாளம் கூறிக்கொண்ட அந்த நபர், தற்போது சமூக வலைத்தளங்களில் பொது மக்களால் பாராட்டபட்டு வருகிறார்.

WATCH OUR LATEST NEWS