நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததுடன் அவரின் மனைவி கடும் காயங்களுக்கு ஆளானார். இச்சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் பேரா, லெங்கோங், மாரா அறிவியல் கல்லூரியின் முன்புறம் பிரதான சாலையில் நிகழ்ந்தது. புரோடுவா மைவி காரில் பயணித்த 65 வயது ஷஹாருதீன் ஒஸ்மான் என்பவர் உயிரிழந்ததாக அடையாளம் கூறப்பட்டுள்ள வேளையில் அவரின் 53 வயது மனைவி கடும் காயங்களுக்கு ஆளானதாக லெங்கோங் தீயணைப்பு, மீட்புப்படை நிலைய தலைவர் அனுர் ரசாலி தெரிவித்தார்.
இவ்விபத்தில் புரோடுவா அருஸ், தொயோத்தா அவான்சா மற்றம் ஒரு கொள்கலன் லோரி என மேலும் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார். காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட அந்த முதியவரின் உடலை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தியதாக அனுவார் ரசாலி மேலும் விவரித்தார்.