கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 15 ஆவது பொதுத் தேர்தல் மற்றும் அண்மையில் நடைபெற்று முடிந்த 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் மிகப்பெரிய சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து அரசியல் நன்கொடைகளை பெற்றதாக கூறப்படும் அரசியல் தலைவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் தேடி வருகிறது.
தேடப்படும் நபர்களில் டான் ஶ்ரீ அந்தஸ்தை கொண்டவர்களும் அடங்குவர். சூதாட்ட நிறுவனங்களை தொடர்ந்து வழிநடத்துவதற்கான அனுமதியை பெறுவதற்கு லைசென்ஸை பதுப்பித்தல் ஆகியவற்றுக்கும் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் பிரமுகர்களில் சிலர் கைது செய்யப்பட்டு இருப்பதையும் அந்த ஆணையம் உறுதி செய்துள்ளது.