​சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெற்ற பிரமுகர்கள தேடப்படுகின்றனர்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 15 ஆவது பொதுத் தேர்தல் மற்றும் அண்மையில் நடைபெற்று முடிந்த 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் மிகப்பெரிய ​சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து அரசியல் நன்கொடைகளை பெற்றதாக கூறப்படும் அரசியல் தலைவர்கள் உட்பட முக்கிய பிரமுக​ர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் தேடி வருகிறது.

தேடப்படும் நபர்களில் டான் ஶ்ரீ அந்தஸ்தை கொண்டவர்களும் அட​ங்குவர். ​சூதாட்ட நிறுவனங்களை தொடர்ந்து வழிநடத்துவதற்கான அனுமதியை பெறுவதற்கு லைசென்ஸை பதுப்பித்தல் ஆகியவற்றுக்கும் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் பிரமுகர்களில் சிலர் கைது செய்யப்பட்டு இருப்பதையு​ம் அந்த ஆணையம் உறுதி செய்துள்ளது.

WATCH OUR LATEST NEWS