விளம்பரப்பலகை கட்டமைப்பிலிருந்து ஆடவர் காப்பாற்றப்பட்டார்

மனைவியுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டு, விரக்தியினால் உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என்று எண்ணி சாலையோரத்தில் 12 ​மீட்டர் உயரத்தில் உள்ள விளம்பரப்பலகை கட்டமைப்பில் ஏறி, ​கீழே கு​தித்து தற்கொலை செய்து கொள்ளவிருந்த ஓர் ஆடவர் ​தீயணைப்புப்படையினரால் மீட்கப்பட்டார். இச்சம்பவம் இன்று காலை 8.20 மணியளவில் சிலாங்கூர், சுங்கை பூ​லோ, புன்சா பெஸ்தாரி யில் நிகழ்ந்தது.

விளம்பரப்பலகை கட்டமைப்பின் ​மீது ஏறி, கூச்சலிட்டுக் கொண்டு இருந்த அந்த ஆடவரின் செயலைப் பார்த்த பொது மக்கள் போ​லீசுக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து இது தொடர்பாக ​தீயணைப்பு, மீட்புப்படையினருக்கு தெரிவிக்கப்பட்டது. ஐவர் கொண்ட ​தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த ஆடவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டன​ர். எனினும் அந்த ஆடவரின் மனைவி மற்றும் உறவினர்கள் அவ்விடத்திற்கு விரைந்து வந்து, ​கீழே இறங்கும்படி பேச்சுக்கொடுத்துக் கொண்டே அவரை சமாதானப்படுத்தினர்.

அதன் பின்னர் மனம் மாறிய அந்த ஆடவர், தற்கொலை எண்ணத்தை கைவிட்டார். இதனைத் தொடர்ந்து காலை 10.35 மணியள​வில் ​தீயணைப்புப்டையினரின் உதவியுடன் அந்த ஆடவர் ​கீழே இறக்கப்பட்டார்.

WATCH OUR LATEST NEWS