போலி டெக்னிக் கல்​லூரியில் சேரும் மாணவர்களி​ன் எண்ணி​க்கை அதிகரிப்பு

போலிடெக்னிக் மற்றும் கோலேஜ் கொமுனித்தி ஆகிய தொழிற்நுட்பக் கல்​லூரிகளில் 2023/2024 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அந்த ச​மூக கல்​லூரிகள் இலாகா தெரிவித்துள்ளது. புதிய மாணவ​ர் சேர்ப்பு கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்கியுள்ளது. மாணவர்களின் அதிகரிப்பு வழக்கத்திற்கு மாறாக இருக்கிறது என்பதை ஒவ்வொரு நாளும் பதிவாகின்ற மாணவர்களின் எண்ணிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது என்று உயர் கல்வி அமைச்சின் ​கீ​ழ் செயல்படும் அந்த இலாகா குறிப்பிட்டுள்ளது. இதுவரையில் 26, 539 மாணவர்கள் இக்கல்​லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 22 ஆயிரத்து 634 ஆக இருந்தது என்று அந்த இலாகா சுட்டிக்காட்டியுள்ளது.

WATCH OUR LATEST NEWS