மலேசிய குடிநுழைவுத்துறை நேற்று அதிகாலையில் சிரம்பான் பெரிய பசாரில் திடீர் சோதனை மேற்கொண்டதில் முறையான பயண ஆவணமின்றி வேலை செய்து வந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்கள் உட்பட 14 சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களை கைது செய்தது.
அதிகாலை 5.40 மணியளவில் குடிநுழைவு அதிகாரிகள் மேற்கொண்ட ஓஸ் ஜாஜா என்ற இந்த நடவடிக்கையில் காய்கறிகள் கடைகள் உட்பட பத்து வர்த்தக வளாகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் கெனித் தான் கியாங் தெரிவித்தார்.
அந்த வர்த்தக மையத்தில் அந்நியத் தொழிலாளர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டு, வர்த்தகத்தை கையாளுவது, அசெகரியத்தை ஏற்படுத்துவாக உள்ளூர் வாசிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 23 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய 14 பேர் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கெனித் தான் கியாங் குறிப்பிட்டார்.