ஆட்சேப பேரணி வேண்டாம், மலேசியத் தினத்திற்கு மதிப்பு அளிப்பீர்

நாட்டின் சுதந்திர தினத்திற்கு அடுத்து போற்றப்படும் மலேசியத் தினத்திற்கு மக்கள் மதிப்பு அளிக்க வேண்டும். அன்றைய தினத்தில் ஆட்சேப பேரணி என்ற போர்வையில் அந்த உன்ன நாளின் சிறப்பிற்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடீன் நசுத்தியோன் இஸ்மாயில் கேட்டுக்கொண்டார்.

நாளை மறுநாள் செப்டம்பர் 16 ஆம் தேதி 58 ஆவது மலேசியத் தினம் கொண்டாடப்படவிருக்கிறது. அன்றைய தினத்தில் மலேசியாவை காப்பாற்றுங்கள் என்ற பெயரில் நாட்டின் தலைநகரில் ஆட்சேப மறியலில் சில தரப்பினர் ஈடுபட முற்படுவது மலேசியத் தினத்திற்கு மதிப்பளிக்கவில்லை என்பதே பொருளாகும் என்று சைபுடின் குறிப்பிட்டார்.

ஒரு சிறப்பு வாய்ந்த தினத்தில் நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மலேசியர்கள் தவிர்க்க வேண்டும். மக்கள் தங்கள் ஆட்சேபத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்துவதற்கு செப்டம்பர் 16 ஆம் தேதியை தேர்வு செய்தது ஏற்புடைய செயல் அல்ல என்று சைபுடின் அறிவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS