நாட்டின் முன்னாள் சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ தோமி தாமஸுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறக் கோரி டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்வதிலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டத்தோ அசிசா நவாவி இன்று விலகினார்.
டத்தோ சீ மீ சுன் மற்றும் டத்தோ லிம் சோங் ஃபோங் ஆகியோருடன் கூடிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய மூவர் குழுவிற்கு அசிசா தலைமை வகித்திருக்க வேண்டும்.
தற்போது பணி ஓய்வு பெற்றிருக்கும் தமது கணவர் டத்தோ நிக் சுஹைமி நிக் சுலைமான், தோமியின் கீழ் சட்டத்துறை அலுவலகத்தில் பணியாற்றி இருந்ததாக இன்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நஜிப்பிடம் தாம் கலந்து பேச வேண்டும் என நஜிப்பின் வழக்கறிஞர் டத்தோ ஃபிரெஸ் ஹுசெயின் அஹ்மாட் ஜமாலுடின் நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டார்.
10 நிமிட ஒத்தி வைப்புக்குப் பின்னர், அசிசா மூவர் கொண்ட நீதிபதி குழுவில் தொடர்ந்து நீடித்து இந்த வழக்கை செவிமெடுக்க நஜிப் ஒப்புக் கொன்டதாக ஃபிரோஸ் ஹுசெயின் தெரிவித்தார்.
இருந்தாலும் தாம் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக அசிசா முடிவெடுத்துள்ளார்.
இந்த வழக்கு பொது நலன் சம்பந்தப்பட்டது என்பதால் தாம் விலகுவதோடு உயர் தரத்திலான விசாரணையை இந்த வழக்கு கொண்டிருக்க வேண்டும் எனும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அசிசா குறிப்பிட்டார்.
அசிசா இந்த வழக்கில் தொடர்ந்து நீடித்திருப்பதில் தோமி தாமஸ் தரப்பு நிகராளிகளுக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை எனத் தெரிவித்திருந்த போதிலும் தமது முடிவில் அசிசா உறுதியாக இருந்து வழக்கில் இருந்து விலகினார்.