கோத்தா டாமன்சாராவில் உள்ள குழந்தை பராமரிப்பு மையம் ஒன்றில் இரண்டு மாத கைக்குழந்தை, மரணம் அடைந்தது தொடர்பில் அந்த மையத்தில் பணிபுரிந்த ஒரு பணிப்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஸ்காவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் சந்தேகம் வலுத்ததைத் தொடர்ந்து 40 வயது ஓர் அந்நிய நாட்டுப் பெண்ணை போலீசார் கைது செய்து இருப்பதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் முஹமாட் ஃபகாருல் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.