பாகான் செராய்யில் இரண்டு வயது குழந்த மரணம், மூவர் கைது

பாகான் செராய்யில் இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று மரணம் அடைந்தது தொடர்பில் போலீசார் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு 7 மணியளவில் அந்தக் குழந்தை சுயநினைவின்றி கிளினிக் ஒன்றில் சேர்க்கப்பட்டப் பின்னர் போலீசார் பெற்ற புகாரின் அடிப்படையில் 62 மற்றும் 57 வயது கணவன், மனைவி மற்றும் அவர்களின் 26 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரியான் மாவட்ட போலீஸ் தலைவர் ஜூனா யூசுஃப் தெரிவித்தார்.

அந்த தம்பதியரின் மகன், அந்த பச்சிளம் குழந்தையை கண்மூடித்தனமாக அடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஜூனா யூசோ குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS