டிஏபி தலைவர் லிம் குவான் எங்கிற்கும், பினாங்கு முதலமைச்சர் சொவ் கொன் யொ விற்கும் இடையில் பனிப்போர் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, மாநில முதலமைச்சர் நியமன விவகாரத்தைத் தொடர்ந்து, இந்தப் பனிப்போர்,திரைமறைவில் நடந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பிரதான கட்சியாக விளங்கும் டிஏபி யின் தலைவர் லிம்மிற்கும், பினாங்கு பக்காத்தான் ஹராப்பான் தலைவர் சொவ் கொன் யொ விற்கும் இடையிலான இந்தப் பனிப்போர், அக்கூட்டணியை வெகுவாக பாதிக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கோடிகாட்டியுள்ளனர்.
தவிர ஒரு கட்சியில் இரு முக்கியத் தலைவர்களுக்கு இடையில் நடைபெறும் சண்டை,பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை பாதிக்காது என்றாலும் டிஏபி- பக்காத்தான் ஹராப்பான் மீதான தோற்றத்தில் கரும்புள்ளி விழலாம் என்று சிங்கப்பூர் அனைத்துலக விவகார கழகத்தை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஒஹ் எய் சுன் எச்சரித்துள்ளார்.