ஒரு தொகுதி மட்டுமே மேல்முறையீடு செய்யப்படும்

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் மிக குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விக் கண்ட பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் கூட்டணி, ஒரு தொகுதியின் முடிவை மட்டுமே எதிர்த்து வழக்கு தொடுக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

பெரிக்கத்தான் நேஷனலிடம் பாரிசான் நேஷனல் வெறும் 58 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விக் கண்ட கோம்பாக் சேடியா சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவை மட்டுமே எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அமிருடின் குறிப்பிட்டார்.

சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் தோல்விக் கண்ட டெங்கில், சுங்கை கண்டிஸ், தாமான் மெடான் ஆகிய 3 தொகுதிகளில் தேர்தல் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செயய்யாது என்று மந்திரி பெசார் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS