கடந்த அக்டோபர் 31 முதல் நவம்பர் 29 ஆம் தேதி வரையில் 5 புதிய குரங்கம்மை நோட் பரவல் ஏற்பட்டுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் 9 குரங்கம்மை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தப்பதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முஹமாட் ரட்சி அபு ஹாஸ்ஸான் தெரிவித்தார்.
புதிதாகப் பதிவு செய்யப்பட்ட அந்த 5 புதிய சம்பவங்களும் மலேசிய ஆடவர்களை உட்படுத்தியது என அவர் குறிப்பிட்டார்.
அந்த 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த 21 நாட்களில் வெளிநாட்டிற்குப் பயணிக்கவில்லை எனவும் முஹமாட் ரட்சி அபு ஹாஸ்ஸான் கூறினார்.
நோய்த்தொற்று கண்டறியப்பட்ட நாளில் இருந்து 5 முதல் 21 நாட்கள் கண்காணிப்பில் அவர்கள் இருப்பதாகவும் டாக்டர் முஹமாட் ரட்சி தெரிவித்தார்.