சந்தேகிக்கும் இரு நபர்களை போலீஸ் தேடி வருகிறது

கிள்ளான், கம்போங் பென்டாமார் பகுதியில் ஒரு வீட்டின் குளியல் அறையில் பெண்ணின் சடலம் புதைக்கப்பட்டிருக்கும் சம்பவத்தை குறித்து போலீசார் இரு வெளிநாட்டு பிரஜைகளை தேடி வருகின்றனர்.

வீட்டில் முன்னதாக வாடகைக்கு இருந்ததாக தெரிய வந்த இரு அந்நிய நாட்டவர்களான ரஞிட் சிங் மற்றும் மன்டீப் சிங் – கை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக சிலாங்கூர் காவல்துறை தலைவர் டத்தோ ஹுசெயின் ஒமார் கான் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் இருக்கின்ற காவல்துறைக்கு சென்று தெரிவிக்கலாம் என்று டத்தோ ஹுசெயின் ஒமார் கான் ஒரு அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.

மேலும் பொய்யான தகவல் எதுவும் சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS