கங்கார், சிம்பாங் எம்பாட், பெர்மாத்தாங் கெரிசிக்- வில் நேற்று மழை பெய்ந்ததை தொடர்ந்து மின்னல் தாக்கியதில் சிறுவன் ஒருவன் காயமடைந்தான்.
இரவு 7 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் 8 வயதுடைய முஹமாட் அசிசுல் ஜாஃபார் மின்னல் தாக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியில் அச்சிறுவனின் தாயார் நோர் லெலாவாத்தி அபு பாக்கார் மூழ்கினர்.
பக்கத்து வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் தம் பிள்ளையை அழைத்து வர செல்லவிருந்த பொழுது மழை பெய்து கொண்டிருத்ததால் காத்திருக்க வேண்டியதாக இருந்தது என்று விசாரணையில் தெரிய வந்ததாக கங்கார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யுஷரிஃபுடின் முஹமாட் யூசோஃப் தெரிவித்தார்.
உடலில் ஏற்பட்ட தீக்காயத்தினால் அச்சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருப்பதாக ஏசிபி யுஷரிஃபுடின் முஹமாட் யூசோஃப் குறிப்பிட்டார்.