அந்நிய நாட்டுப் பெண்களை மோகப் பொருளைப் போல் பயன்படுத்தி, அவர்களை தலா 200 வெள்ளி முதல் 1000 வெள்ளி வரைக்கும் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்கு கடந்த ஓராண்டு காலமாக சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தி, ஒழுங்கீன நடவடிக்கையை மேற்கொண்டு வந்த விபச்சார கும்பலை மலேசிய குடிநுழைவுத்துறை முறியடித்துள்ளது.
நேற்று இரவு ஈப்போவில் ஐந்து முக்கிய இடங்களை இலக்காக கொண்டு குடிநுழைவுத்துறையின் அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 141 அந்நிய நாட்டுப் பெண்களும், 10 உள்ளுர் பெண்களும் கைது செய்யப்பட்டதாக மலேசிய குடிநுழைவுத்துறை துணை தலைமை இயக்குநர் Jafri Embok Taha தெரிவித்தர்.
இந்த சோதனைகள் யாவும் கேளிக்கை மையங்கள் மற்றும் இன்னிசை மையங்கள் ஆகியவற்றை இலக்காக கொண்டு நடத்தப்பட்டதாகும் என்று அவர் விளக்கினார்.
18 க்கும் 36 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்தப் பெண்கள் சீனா, வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேசியா, மியன்மார் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.