ஒன்பது வெளிநாட்டு பிரஜைகள் கைது

ஜொகூரில் சட்டவிரோதமாக குடிநுழைந்து வேலை செய்துவரும் 9 அந்நிய பிரஜைகளை ஜொகூர் குடிநுழைவுத்துறை கைது செய்துள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கபெற்ற புகாரை தொடர்ந்து நேற்று காலை 10.40 மணியளவில் அவ்விடத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டு சந்தேகிக்கும் அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் குடிநுழைவுத்துறையின் அதிகாரி பஹாருடின் தாஹிர் தெரிவித்தார்.

28 முதல் 48 வயதிற்கு உட்பட்ட இந்தோனேசியா, மியன்மார் ஆகிய நாடுகளை சேர்ந்த அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக பஹாருடின் தாஹிர் அறிவித்தார்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சம்பந்தப்பட்ட நபர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் பஹாருடின் தாஹிர் கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS