போர்ட்டிக்சன்,ஜன16.
நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சனில் 25 ஆயிரம் வெள்ளி பணத்தை மறைத்து வைத்தக் குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு இங்குள்ள செஷன் நீதிமன்றத்தில் 4 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
24 வயது அலிஃப் நஜ்மி மர்சுக்கி இக்குற்றத்தைக் கடந்காண்டு புரிந்ததாக மஜிஸ்ட்ரெட் உத்மான் அப்துல் கானி முன்னிலையில் வாசிக்கப்பட்டது. அதனை குற்றஞ்சாட்டப்பட்ட அலிஃப் ஒப்புக்கொண்டார்.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால், 3 மாதங்கள் சிறை தண்டனையை அலிஃப் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.