கோத்தா கினபாலு,ஜன.17
நச்சு வாயு கலன்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த கிடங்கில் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படும் ஒரு ஆணும், பெண்ணும் மரணம் அடைந்தனர். இச்சம்பவம் இன்று காலையில் கோத்தா கினபாலு, Likas என்ற இடத்தில் நிகழ்ந்தது.
உயிரிழந்த அந்த ஆண் மற்றும் பெண்ணின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. இன்று காலை 10.22 மணியளவில் பெறப்பட்ட ஓர் அவசர அழைப்பைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தாங்கள் விரைந்ததாக கோத்தா கினாபாலு தீயணைப்பு நிலைய செயலாக்க அதிகாரி முஹமாட் ஹானிஸ் மொக்தார் தெரிவித்தார்.