காப்பார், மார்ச் 8 –
காப்பாரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் போலீசார் இதுவரையில் ஐந்து ஆடவர்களை கைது செய்துள்ளனர் என்று வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி ஸ் விஜயராவ் தெரிவித்தார்.
காப்பார், 11 ஆவது மைல் பெக்கான் காப்பார் ரில் நேற்று மாலை 4.54 மணியளவில் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 46 வயது பாதுகாவல் மேலாளர் ஒருவர் மிக நெருக்கமான நிலையில் சுடப்பட்டார். வலது கையிலும் விலா எலும்பிலும், தோள்பட்டையில் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளான அந்த மேலாளர் கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாக ஏ.சி.பி விஜயராவ் குறிப்பிட்டார்.
ஒரு கறுப்பு நிற காரில் வந்திறங்கிய சந்தேகப்பேர்வழி , இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதன் தொடர்பில் போலீசார் நடத்திய அதிரடி தேடல் நடவடிக்கையில் காப்பார் வட்டாரத்தை சேர்ந்த் 40 க்கும் 45 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான பின்னணி காரணங்களை குற்றவியல் சட்ம் 307 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்ப்டடு வருவதாக ஏ.சி.பி விஜயராவ் தெரிவித்தார்.