வெ.7,500 கையூட்டு பெற்றதற்காக கல்வி நிறுவன ஊழியர் தடுப்பு காவல்

பராமரிப்பு ஒப்பந்ததாரர்களிடமிருந்து 7,500 வெள்ளி லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக மலாக்காவில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் பணியாளர் ஐந்து நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விண்ணப்பத்தை பெற்ற பிறகு, 41 வயது அந்த நிறுவன பணியாளர் வருகின்ற சனிக்கிழமை வரையில் ரிமாண்டில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் கைருன்னிசாக் ஹஸ்னி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் பராமரிப்பு ஒப்பந்ததாரர்களின் பணிகளை விரைவுபடுத்த உதவுவதற்காக குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டது.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்ட நபர் விளக்கமளிக்க வந்த வேளையில் கைது செய்யப்பட்டதாக மலாக்கா, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் ஆதி சுபியான் ஷஃபி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS